
இயக்குனர் ராம்கோபால் வர்மா நடிகர் சூர்யாவை வைத்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘ரத்த சரித்திரம்’ படத்தை இயக்கிவருகிறார்.
அடுத்து தன் உதவியாளர் அஜித்தின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தை இந்தி, தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கவுள்ளார் ராம்கோபால் வர்மா. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் நாயகன் விஜய் என்பது மட்டும் உறுதியாகிவுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழு விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. இந்திப் பதிப்பின் நாயகனாக அக்ஷய் கண்ணா நடிக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக “நாடோடிகள்” படத்தின் மூலம் புகழ் பெற்ற அனன்யா நடிக்கவுள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.