“எனக்காக கதையில் எந்த மசாலாவையும் சேர்க்க வேண்டாம்” - விஜய்

அமீர்கான் ஏற்று நடித்த காதாபாத்திரத்தை இங்கே விஜய் ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதோடு, “எனக்காக கதையில் எந்த மசாலாவையும் சேர்க்க வேண்டாம்” என்று சொல்லியிருப்பது ரீமேக் உரிமை வாங்கியிருக்கும் ஜெமினி பிலிம்சர்க்யூட் நிறுவனத்தை மகிழ்ச்சியில் உலுக்கியிருக்கிறது.

விஜய் ஒரு புதிய பவுண்டரிக்குள் நுழைய ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதால், இதை வீணாக்கி விடக்கூடாது என்று கவனமாக ஒவ்வொரு விஷயத்தையும் கையாண்டு வருகிறதாம் ஜெமினி.


மேலும் மதுரையை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் அரசியல்வாரிசின் சினிமாநிதி உரிமையை கைப்பற்ற நினைத்தால் நான் விலகிவிடுவேன் என்பதையும் சொல்லிவிட்டாராம் விஜய்.


முதலில் இயக்குனரை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று விஜயிடம் நிறுவனம் சொல்ல, இல்லை இல்லை அதையும் நீங்களே முடிவு செய்யுங்கள் என்று விஜய் சொல்லிவிட, இப்போது இயக்குனராக ஷங்கரை ஒப்பந்தம் செய்துள்ளது ஜெமினி. எந்திரன் வெளியீட்டிற்குப் பிறகு 3 இடியட்ஸ் துவங்கவிருப்பதாக ஜெமினி வட்டாரங்கள் கூறுகின்றன.